சனி, ஆகஸ்ட் 27, 2011

என் விகடன்...

சுதந்திர தினத்தன்று அகரம் சித்தாமூர் என்ற கிராமத்தில் மரம் நட சென்ற போது நான் எடுத்த ஒரு மின் படத்தை  இதே வலைப்பூவில் சுதந்திர தினம் !?! என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தேன். அந்த படத்தால் ஈர்க்கப்பட்ட எனது நண்பன் சௌந்தரராஜன், என்னை ஆச்சரியப் படுத்த எனக்கு தெரியாமல் விகடனுக்கு அனுப்ப, அது இந்த வார ஆனந்த விகடன் - என் விகடன் - புதுச்சேரி இதழில் ஸ்மைல் பிளீஸ் பகுதியில் பிரசுரமாகியுள்ளது.



(படத்தை பெரிதாக்க அதன் மீது சொடுக்குங்கள்)

அதில் தவறுதலாக நண்பன் சௌந்தரராஜன் பெயர் அச்சாகி இருந்தாலும், நல்ல தரமான மின்படம் எடுக்கிறேன் என்ற மன நிறைவை தந்ததற்காக நண்பனுக்கும், தரமான மின்படத்தை அச்சேற்றி உற்சாகம் தந்ததற்காக என் விகடனுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

நான் அவசியம் நன்றி சொல்ல வேண்டிய இன்னொருவர்  நண்பர் வெங்கடேசன். என் மீதும் நம்பிக்கை வைத்து Panasonic FZ100 Camera வாங்கிய அவருக்கும் எனது நன்றிகள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

அன்னா-விரதம்...



நேகமாக ஆறாம் வகுப்பு படிக்கையில் என ஞாபகம். "அப்போ மட்டும் நான் இருந்திருந்தா வெள்ளைகாரங்களை உண்டிவில்லாலேயே அடிச்சு விரட்டி இருப்பேன்டா" நண்பர்கள் மாரிமுத்து மற்றும் தண்டபாணியிடம் பேசியது நினைவிருக்கிறது. அந்த ஆவல் இப்போது ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கும் அன்னாவிற்கு ஆதரவாக களமிறங்க செய்தது.

கடந்த 22 ம் தேதி  நான் சார்ந்துள்ள இயக்கம் சார்பாக விழுப்புரம் ஆட்சியரகம் எதிரில் வலிமையான லோக்பாலை வலியுறுத்தி  உண்ணாவிரதம் இருந்தோம். இதற்கு கிடைத்த ஆதரவு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான நாங்களே எதிர்பாராதது. நாங்கள் அழைத்தவர்கள் மட்டுமல்லாது தானாகவே முன் வந்து பலர் கலந்து கொண்டனர்.

கணவனும் மனைவியுமாக சிலர் பங்கெடுத்தனர். சிலர் தங்கள் குழந்தைகளையும் கூட்டி வந்திருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர், தன் கணவரிடம் வாகனத்தை நிறுத்த சொல்லி இருவருமாக சிறிது நேரம் உட்கார்ந்து சென்றனர்.

இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதை கேள்விப்பட்டு,  சுதந்திரப்போராட்ட தியாகி திரு. நாராயணசாமி அவர்கள் (95 வயது) புதுவையிலிருந்து வந்து கலந்துகொண்டதும், இதே நாளில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் நடைபெற்ற மாற்று திறனாளிகளின் கூட்டத்திற்கு வந்த, இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்ட திரு. புண்ணியகோடி, மாற்று திறனாளிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் நமது நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் நெகிழ்ச்சி அளித்தது.

வலிமையான லோக்பால் நடைமுறைக்கு வந்துடும்ங்க. நம்பிக்கை இருக்கு.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

காவல் தெய்வம்!!!



பூட்டி இருந்தது கோவில்.
உள்ளே இருந்தது
காவல் தெய்வம்!
                       
                       -ரா.சுப்பிரமணி


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

நேதாஜி




மாவீரர் நேதாஜி அவர்களின் நினைவு நாள் இன்று (அரசு ஆவணங்களின் படி). ஆனால், நம்மில் பலர் அவர் அந்த விபத்தில் இறந்ததாக நம்பவில்லை.

எனது நண்பன் சௌந்தரராஜன், தனது கனவு நாயகனான அவர் புகைப்படத்தின் கீழே இப்படி எழுதி இருக்கிறான், "மரணமெல்லாம் மகாத்மாவுக்கு தான். மாவீரனுக்கல்ல"

சுதந்திரம் வேண்டி இந்தியாவில் எல்லோரும் போராடி கொண்டிருக்க, அதற்கு நல்லதொரு வாய்ப்பாக வந்தமைந்தது இரண்டாம் உலகப் போர். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஓரணியில் இருக்க, எதிர் அணியில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் இருந்தன. எதிரிக்கு எதிரி நண்பன் எனும் படி, பிரிட்டனை எதிர்ப்பவர்களுடன் கூட்டமைத்தார் நேதாஜி. போரில் வென்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் என ஒப்பு கொண்டு பிரிட்டனுக்கு எதிராக போராட இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார்.

ஆனால் எதிர்பாராவிதமாக ஆகஸ்ட் 6, 1945 அன்று ஜப்பானிய நகரங்களில் அமெரிக்காவால் போடப்பட்ட அணுகுண்டு, உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. தன் அணி தோற்றத்தாலும், தான் எதிர்த்த பிரிட்டன் வென்றதாலும், தனது வியூகத்தை மாற்ற ஜப்பான் ராணுவத்தின் உதவியுடன் தைவானில் விமான விபத்தில் தான் மரணமடைந்ததாக ஒரு செய்தியை பரப்பி, ஜப்பான் வழியாக ரஷ்யாவிற்கு சென்றார். (2005 ல் மத்திய அரசால் நேதாஜியின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷன், அவர் தைவான் விமான விபத்தில் இறக்கவில்லை என்றே அறிக்கை அளித்தது.)

அவர் பகவான்ஜி என்ற பெயரில் சாமியாராக உத்திர பிரதேசத்தில் அயோத்திக்கு அருகில் ராம்பவன் என்ற கிராமத்தில் வாழ்ந்தார் என உறுதியாக நம்புபவர்கள் இருக்கின்றனர். இருவரது உருவ அமைப்பும், பழக்க வழக்கமும், ரசனையும், நண்பர்களும், கையெழுத்தும் ஒரே மாதிரி இருந்ததாக கூறுகின்றனர். TIMES பத்திரிக்கையும் நேரு அவர்களின் மரணத்தை காண வந்த சுபாஷை போலவே இருக்கும் ஒரு சாமியார் படத்தை போட்டு அவர் சுபாஷாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தது.

இப்படியெல்லாம் இருந்த சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நேதாஜியின் ஓட்டுனராக இருந்த 107 வயதாகும்  திரு.நிஜாமுதீன் அவர்கள், விபத்து நடந்து நான்கு மாதங்களுக்கு பிறகு பர்மா, தாய்லாந்து எல்லை அருகில் உள்ள சிடங்பூர் ஆற்றங்கரையில் அவரை இறக்கி விட்டதாக கடந்த 12 ம் தேதி கூறி உள்ளார்.

தேசிய அளவில் புகழின் உச்சியில் இருந்த ஒரு மனிதர், தன்னை மறைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எளிமையாக வாழ்வது என்பது சாதாரண விஷயமல்ல. உண்மையிலேயே அவர் மாவீரர் தான். அரசின் காவலையும் மீறி Great Escape ஆனதாலோ, யுத்த நேரத்தில் நீர்மூழ்கியில் பயணித்ததாலோ மட்டுமல்ல. இப்படி ஒரு எளிய வாழ்கை வாழ்ந்ததாலும் தான்.

குறிப்பு: பகவான்ஜி 16 செப்டம்பர் 1985 இல் காலமானார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் உங்கள் பணம் (நன்கொடை) திருப்பி தரப்படும் என்ற உறுதி மொழியுடன்

ஆசாத் ஹிந்த் வங்கியால் வெளியிடப்பட்ட (ஒரு  லட்ச)   ரூபாய். (இணையத்தில் எடுத்தது)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

சுதந்திர தினம் ! ? !



பாதுகாப்பு பணியில் 7000 போலீசார்,
பேருந்து, ரயில் நிலையங்களில் 72 மணி நேர சோதனை,
குண்டு துளைக்காத அறையில் முதல்வர் உரை,
வரலாறு காணாத பாதுகாப்பு,
சுதந்திர (!)(?)(!) தின விழா.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

பார்வைகள் !!!


வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு
வெளியே வருகையில், வாயிற்படியை அடைத்து கொண்டு
பதிவு செய்ய காத்திருக்கும் இளைஞர்களின் கூட்டம்.

வெளியேற வழியில்லாமல் திணறிய நான்
நினைத்துக் கொண்டேன், "வழியே விட மாட்றாங்க!".

கூட்டத்திலிருந்து உள்ளே நுழைய முயன்ற பெண் சொன்னாள்,
"ச்சே! வழியே விட மாட்றாங்க!" 
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...