ஆலன் ஆக்டேவியன் ஹ்யும் என்ற ஆங்கிலேயரால் ஆரம்பிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் நலனுக்காகவே செயல்பட்டு வந்த காங்கிரஸ் திலகரின் வருகைக்கு பிறகு தான் முகம் மாற ஆரம்பித்தது. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்ற முழக்கத்துடன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக காங்கிரசை போராட செய்தார். அவரது தலைமையில் காங்கிரஸ் செயல் பட்டு கொண்டிருந்த காலம். இதோ சுதந்திரம் கிடைக்கப் போகிறது என நாடே நம்பி கொண்டிருந்தது. அப்படி சுதந்திரம் கிடைத்தால், திலகர் தான் பிரதமர் என நாடெங்கும் பேச்சிருந்தது. இது குறித்து திலகரிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு திலகர் சொன்ன பதில்... "பிரதமரா? நானா? ஒருக்காலும் இல்லை. நான் ஆசிரியன். என்னால் நூறு பிரதமர்களை உருவாக்க முடியும். இந்தியா சுதந்திரம் பெற்றதும் நான் எனது ஆசிரியப் பணிக்கு திரும்புவேன்."
பெருமை கொள்ளுங்கள் ஆசிரியர்களே... எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் உன்னதமான பணியை செய்து கொண்டிருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்.
தனி வகுப்பு எடுக்காமல், ஒழுக்கத்தில் மாணவர்களுக்கு உதாரணமாக விளங்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.