சனி, ஏப்ரல் 30, 2011

அமைதி புறா...


சூதியை ஒட்டிய கசாப்பு கடை.
கால்கள் கட்டப்பட்ட கோழிகள் 
கதறிக் கொண்டிருந்தன.
மசூதியிலிருந்து பட படத்து பறந்தது
வெள்ளை புறா!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

நானே நானா...




சாலையின் நடுவிலிருந்து,
லாரிக்கு பயந்து இடப்புறமும்,
பஸ்க்கு பயந்து வலப்புறமும்,
மிரண்ட விழிகளோடு 
அலை பாய்ந்து கொண்டிருக்கும் நாய்,
நினைவு படுத்துகிறது
டிரேடிங்கின் போது என் நிலையை.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வியாழன், ஏப்ரல் 21, 2011

வரம் தந்த சாமி...










1985 ஆம்ஆண்டு வெளியான சிப்பிக்குள்முத்து  திரைப்படத்தில் வைரமுத்து அவர்களால் எழுதப் பட்டு, இளையராஜா அவர்களால் இசை அமைக்கப் பட்டு  பி.சுசீலா அவர்கள் பாடிய என்னை கவர்ந்த பாடல்...
 


 


லாலி லாலி லாலி லாலி
லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு...
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரிராரோ 
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே
கருயானை முகனுக்கு...
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
கருயானை முகனுக்கு மலை அன்னை நானே
பார் போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரிரோ... ஆரிராரிரோ... 
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஆனந்த கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே
ஸ்ரீராமன் பாடும் அந்த கம்ப நாடன் நானே
ஸ்ரீராமன் பாடும் அந்த கம்ப நாடன் நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ராம ராஜனுக்கு வால்மீகி நானே
ஆகாய வண்ணனுக்கு தியாகய்யர் நானே
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
வரம் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரிராரோ
















 
 
இந்த படம் வெளியான ஆண்டு 1985. இந்த பாடல் அதற்கும் 40 ஆண்டுகள் முன்பு  நடப்பதாக கதையில் வரும். அப்படியானால் இந்த பாடல் பாடப்படும் காலம் சுமாராக 1945 ஆம் ஆண்டு. அந்த காலத்தில் பெண் அடிமைத்தனம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. பிள்ளை பெறாதவள் மலடி என்று இழிவு படுத்தப் பட்டாள். ஒரு மலடிக்கு எந்த ஒரு சமுதாய நிகழ்விலும் மரியாதை கிடைத்ததில்லை. அப்படி ஒரு இன்னலுக்கு தன்னை ஆளாக்காமல் தனக்கு தாய்மை என்ற வரம் தந்த சாமிக்கு - குழந்தைக்கு பாடுவதாக இந்த பாடல் அமைந்துள்ளது.


தன் பிள்ளை எவ்வளவு சிறப்பாக இருக்க வேண்டும் என்கிற அவளது ஆர்வம் இந்த பாடலில் சொல்லப் பட்டுள்ளது. ராமன், கண்ணன், பிள்ளையார், முருகன் போல தன் மகன் உலகம் போற்றும் உத்தமனாக வருவான் என்கிறாள். அப்படி பட்ட என் பிள்ளையின் புகழ் பாடுபவளாக -  கம்பன், வால்மீகி, தியாகய்யராக தான் இருப்பேன் என்கிறாள்.
 

இங்கு ஒரு சிறு விஷயம் - கவிஞ்னின் சொல்லாடல் - கவனிக்க வேண்டும். யானை காடுகளில் மலைகளில் இருக்கும். அதனால் யானை முகனுக்கு மலை அன்னை [பார்வதி], உலகம் புகழும் (பார் போற்றும்) முருகனுக்கு பார்வதி [பார்+வதி - மலை அன்னை]


இனிய இசையோடும், இழைந்தோடும் குரலோடும்... அற்புதமான பாடல். அனுபவித்துக் கேளுங்கள். ஆனந்தம் அடைவீர்கள்.


[என்ன செய்தும் இந்த இடுகையை ஒழுங்காக அமைக்க முடியவில்லை. மன்னிக்கவும். இதை சரியாக்கும் யோசனை ஏதேனும் தெரிந்தால் சொல்லவும்.]
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

புதன், ஏப்ரல் 13, 2011

தேர்தல் கலாட்டா...




மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சனி, ஏப்ரல் 09, 2011

அன்னா ஹசாரே...




டந்த ஐந்தாம் தேதி மாலை நண்பர் இராம்பாக்கம் அருள் தொலைபேசியில்  அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். அவருக்கு ஆதரவாக நாமும் உண்ணாவிரதம் இருப்போமா எனக் கேட்டார். அவர் குறித்தும் அவர் போராட்டம் குறித்தும் ஏற்கனவே கொஞ்சம் அறிந்து வைத்திருந்ததால் உடனே சம்மதம் சொன்னேன். ஆனால் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி, காவல் துறையால் உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுக்கப் பட்டது வருத்தமான விஷயம்.

அன்னா ஹசாரே என அனைவராலும் அன்போடு அழைக்கப் படும் 72 வயதாகும்  கிசான் பாபுராவ் ஹசாரே ராணுவத்தில் பணி புரிந்து, காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சமூக பணியில் ஈடுபட்டவர். 

மகாராஷ்டிராவின்  அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் மாதிரி கிராமமாக மாற்றினார். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கும் இவர் வலிமையாக மாற்றிய மகாராஷ்டிராவின் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை அடிப்படையாக கொண்டே  கடந்த 2005 ஆம் ஆண்டு நமது இந்திய அரசு  தேசிய அளவில் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை வலிமையானதாக கொண்டு வந்தது.


இந்நிலையில் ஊழல், லட்சங்களிலிருந்து கோடிகளுக்குப் போய், அதிலிருந்து லட்சம் கோடிகளுக்கு போனதை பார்த்து நாடே அதிர்ந்தது. எவ்வளவு உழைத்தாலும் ஊழல் இருக்கும் வரை முன்னேற்றம் வராது என்பதால் இதற்கு முடிவு கட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே (கர்நாடக மாநிலத்தின் லோக் ஆயுக்தா [தேசிய அளவில் லோக் பால். மாநில அளவில் லோக் ஆயுக்தா. - இந்தியாவில் மாநிலங்களின் தன்னார்வத்தில் கர்நாடகா, கேரளா மற்றும் டெல்லியில் லோக் ஆயுக்தா இயங்கி வருகிறது] தலைவரான இவர், முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லோக் ஆயுக்தா மூலம் வழக்கு தொடுத்தவர்) உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் [2G அலைக்கற்றை ஊழலில் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இப்போது நடந்து வரும் வழக்கை தொடுத்தவர்.] ஆகியோருடன் இணைந்து 'INDIA AGAINST CORRUPTION' என்ற அமைப்பின் மூலம் மாதிரி லோக் பால் மசோதாவை தயாரித்தார். அரசு தரப்பில் தயாரிக்கப் பட்ட மசோதாவை விட, குற்றவாளிகள் தப்பித்து விடாத வகையில் வலிமையானதாக தயாரித்தார். அரசு தரப்பில் தயாரிக்கப் பட்ட மசோதாவில் நிறைய ஓட்டைகள் இருந்ததால் மக்கள் குழு ஒன்றை அமைத்து அதனோடு கலந்து பேசி மசோதாவை வடிவமைத்து நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு பல முறை தெரியப் படுத்தியும் ஒழுங்கான பதில் எதுவும் வராததால், இது குறித்த முடிவை ஏப்ரல் 4 ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் தாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தார். அரசிடம் இருந்து குறிப்பிட்ட நாள் வரை அறிவிப்பு எதுவும் வராததால் ஏப்ரல் 5 ஆம் தேதி அன்று நூறு பேரோடு நாடாளுமன்றம் முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார்.

ஆரம்பத்தில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அரசு, அமைச்சர்கள் மூலமாக அவரை சமாதானப் படுத்தும் முயற்சியில் இறங்கியது. ஆனால் தனது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார் அன்னா. உண்ணாவிரதம் தொடங்கியது முதல் அவருக்கு நாடெங்கும் ஆதரவு பெருகத் தொடங்கியது. இளைஞ்ர்களும், இணையமும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் அவருக்கு ஆதரவாக இறங்க, மிரண்டு போன அரசு அன்னா சொன்ன கருத்துக்களை ஏற்பதாக ஏப்ரல் 8 இரவு அறிவித்து உண்ணாவிரதத்தை முடித்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டது. முறைப்படி அரசு கெஜெட்டில் வெளியிட்டதும் உண்ணாவிரதத்தை முடித்து கொள்வதாக அறிவித்தார். அதன்படி இன்று அரசு முறைப்படி அறிவிக்க காலை சுமார் 10.45 க்கு உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் அன்னா ஹசாரே. அவர் உண்ணாவிரதம் முடிக்கும் போது அவருடன் சேர்த்து நாடு முழுதும் உண்ணாவிரதம் இருந்தவர்கள் சுமார் 10.5 லட்சம் பேர்.

அன்னா கேட்டு கொண்டதற்கிணங்க அரசு அமைத்துள்ள குழு....


1. பிரணாப் முகர்ஜி (தலைவர்) 2. கபில் சிபல் 3. வீரப்ப மொய்லி 4. சல்மான் குர்ஷீத். 5. ப.சிதம்பரம் 6. சாந்தி பூஷன் (துணை தலைவர்) 7. அன்னா ஹசாரே 8. பிரசாந்த் பூஷன் 9. சந்தோஷ் ஹெக்டே 10. அரவிந்த் கேஜ்ரிவால்.

சாந்தி பூஷன் - 1972 ஆம் ஆண்டு மதிய சட்ட துறை அமைச்சரான இவர் அப்போதே லோக் பால் மசோதாவை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தவர். சமீபத்தில் நீதி மன்றங்களின் நேர்மை தன்மை குறித்து கேள்வி எழுப்பியவர்.

அரவிந்த் கேஜ்ரிவால் - தகவல் அறியும் உரிமை சட்ட போராளி.

சுதந்திர இந்தியாவில் சட்டம் ஒன்று பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அதன் படி இயற்றப்படுவது இதுவே முதல் முறை. ஜனநாயக நாட்டில் மக்கள் சக்தி நிரூபிக்கப் பட்டுள்ளது. காந்தியம் இன்னும் வாழ்கிறது என்பது மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இவற்றை சாத்தியப் படுத்திய நாயகன் அன்னா ஹசாரே அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.  
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

கடவுள்...



ரசு
வேம்பு
வில்வம்
வன்னி
மகிழம்
நாக லிங்கம் 
ஆலம்
அத்தி
 கருங்காலி 
இலந்தை
மா
என எல்லா கோவில்களிலும் 
காட்சி தருகிறார் கடவுள்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...
Related Posts Plugin for WordPress, Blogger...