முன்னுரைக்கு முன்னுரை:
வாழ்வே பேரானந்தம் இன்று தன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பல வழிகளிலும் எனக்கு உற்சாகம் தந்து உதவிய அத்தனை நண்பர்களுக்கும் இந்த தருணத்தில் மகிழ்ச்சி தெரிவித்து கொள்கிறேன்.
முன்னுரை:
உளுந்தூர்பேட்டைக்கு பதினைந்து கிலோமீட்டர் அப்பால், ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே பேருந்து வந்து செல்லும், அதிகபட்சம் அறுபது குடும்பங்கள் வசித்த, மின்சாரம் இல்லாத கூவாடு எனும் பாரதிராஜா கிராமத்தில் எனது தாய் வழி பாட்டனார் சுற்றி இருந்த பல ஊர்களிலும் செல்வாக்கோடு வாழ்ந்து வந்தார். சுமார் 18ஆண்டுகளுக்கு முன் அவர் பூவுடல் நீத்த நாளில் ஊரெல்லாம் திரண்டு அழுது கொண்டிருக்க, பசி தாங்காத நான் சாப்பிட ஏதாவது கிடைக்கும் என்ற நப்பாசையில் வீடு முழுதும் தேடியும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் வித்தியாசமான சில சில்லறை காசுகள் கிடைத்தன. அதை எடுத்துக் கொண்டு ஊரில் இருந்த ஒரே பெட்டி கடையில் ஏதாவது வாங்கி சாப்பிட போனவனுக்கு ஏமாற்றம். கடை பூட்டி இருந்தது. கடைக்காரரும் தாத்தாவுக்காக அழுது கொண்டிருந்தார். அப்புறம் தோட்டத்தில் கடலைக்காய் பறித்து சாப்பிட்டு பசி ஆறினேன்.
அந்த பிரிட்டீஷ் இந்திய சில்லறை காசுகளுடன் தொடங்கியது தான் எனது நாணயங்களுடனான சிநேகம். அது முதல் இன்றுவரை எல்லா வகையான நாணயங்களையும் சேமித்து வருகிறேன்.
இது இந்திய நாணயங்கள் குறித்த ஒரு தொடர் பதிவு. ஆனால் நாணயங்களை Scan செய்து, செப்பனிட்டு எழுத வேண்டும் (கொஞ்சம் மெனக்கெட்டு உழைக்க வேண்டும்) என்பதால் தொடர்ச்சியாக எழுதுவேன் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும் மாதத்திற்கு ஒன்றாவது எழுதிவிட முயல்கிறேன். இனி தொடர்...
*****************
உலகின் முதல் நாணயம்
ஆதி காலத்தில் பொருட்கள் பண்டமாற்று முறையிலேயே பரிமாறிக் கொள்ளப் பட்டன. இந்த பண்டமாற்று முறையில் பொருட்களுக்கு மதிப்பு நிர்ணயிப்பது சிரமமான விஷயமாயிருந்தது. அதே போல தேவையில்லாத பொருளையும் பண்ட மாற்றாக பெற வேண்டிய நிர்பந்தம் இருந்தது. இது போல சில அசௌகரியங்கள் நாணயத்திற்கான தேவையை உண்டாக்கின.
உலகின் முதல் நாணயம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் துருக்கியில் லிடியா என்ற இடத்தில் உருவாக்கப் பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் இந்தியாவிலும், கிரேக்கத்திலும் நாணயம் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
இந்தியாவில் திருவிதாங்கூர், குவாலியர், இந்தூர், ஜோத்பூர், கட்ச், மேவார், மைசூர், விஜயநகரம் உட்பட பல சமஸ்தானங்கள் / பேரரசுகள் நாணயங்களை வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் நமது சேர, சோழ, பாண்டியர்கள் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல்லவரை வீழ்த்திவிட்டு புதுக்கோட்டையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றி புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார் ரகுநாத தொடைமான். அவரும் அவரது வாரிசுகளும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக செயல்பட , தனியாக நாணயம் வெளியிடுமளவிற்கு புதுக்கோட்டை சமஸ்தானதிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்திருந்தனர்.(கட்டபொம்முவை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்து தங்கள் ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக தொண்டைமான்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு.) சம காலத்தில் தமிழகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரே நாணயம் இவர்கள் வெளியிட்ட, பொட்டு காசு என்று அழைக்கப் பட்ட "ஸ்ரீ விஜயா" என்று பொறிக்கப் பட்ட
திருவிதாங்கூர் சமஸ்தானம்
இந்தூர் சமஸ்தானம்
16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல்லவரை வீழ்த்திவிட்டு புதுக்கோட்டையையும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் கைப்பற்றி புதுக்கோட்டை சமஸ்தானத்தை உருவாக்கினார் ரகுநாத தொடைமான். அவரும் அவரது வாரிசுகளும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக செயல்பட , தனியாக நாணயம் வெளியிடுமளவிற்கு புதுக்கோட்டை சமஸ்தானதிற்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்திருந்தனர்.(கட்டபொம்முவை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்து தங்கள் ஆங்கிலேய விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக தொண்டைமான்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு.) சம காலத்தில் தமிழகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரே நாணயம் இவர்கள் வெளியிட்ட, பொட்டு காசு என்று அழைக்கப் பட்ட "ஸ்ரீ விஜயா" என்று பொறிக்கப் பட்ட
புதுக்கோட்டை அம்மன் காசு தான்.
மேற்கண்ட நாணயத்திலிருந்து எனக்கு ஒரு விஷயம் புலப்படவில்லை. தமிழ் மன்னன் இராஜராஜன் தனது பெயரை தேவநாகரி மொழியிலும், தமிழக மன்னன் தொண்டைமான் தமிழல்லாத மொழியிலும் (அநேகமாக தெலுங்கு) நாணயம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆதியிலிருந்தே தமிழகத்தில் தமிழ் அகதியாகத் தான் இருக்கிறதோ என சந்தேகமாக இருக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் விளக்கவும்.