புதன், ஜூன் 15, 2011

என்னவாக போற?



சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த சேது விரைவு வண்டியில் பயணிக்கும் போது, தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இரு குழந்தைகள் என குடும்ப சகிதம் பயணித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்  அருகே அமர இடம் கிடைத்தது. பயண நேரத்தை பாதியாக குறைக்க சுமார் இரண்டரை வயது உள்ள அந்த பெண் குழந்தையிடம் "உம் பேர் என்ன?" என கேட்டேன். மூன்றாவது முறை கேட்கும் போது அவள் அண்ணன் பதில் சொன்னான். "அது பேரு பிரதிச்சா". 

அவனிடம் கேட்டேன், "உம் பேர் என்ன?". 
"எம் பேரு கிசோரு".

எத்தனாவது படிக்கற?
ஒன்னாம்ப்பு 

எந்த ஸ்கூல்ல படிக்கற?
உள்ளூர் ஸ்கூல்ல.

உன் டீச்சர் பேர் என்ன?
அமுதா டீச்சர்.

உன் பிரண்டு பேர் என்ன?
வெங்கடேசு.

ரெண்டு பேரும் என்ன பண்ணுவீங்க?
தெரத்தி பிடிச்சு வெள்ளாடுவோம்.

பேசிக் கொண்டே இருக்கும் போது, "அய்யே அங்க பாரேன், வாளி மாதிரி இருக்கு பாரேன்" சிறுவன் கூடுவாஞ்சேரி L&T நிறுவனத்தின் கட்டிடத்தை பார்த்து வியக்க, 

"அந்த மாதிரி கட்டடம் கட்டறது கஷ்டம் தெரியுமா?. இதே மாதிரி நீ கட்டுவியா?" - நான்.
"ம், கட்டுவேன்.

பெரியவனானதும் நீ என்ஜினீயர் ஆக போறியா?" -நான்.
சிறுவன் ஆமாம் என்றதும், அவனை அள்ளி உச்சி முகர்ந்தாள் அவன் தாய்.

இப்போது என் இடது புறத்திலிருந்து சிறுமியின் குரல் கேட்டது. "நானு செய்யதம்மா ஸ்கூல்ல படிக்கப் போறேன்."

"அப்படியா! படிச்சுட்டு என்னவா ஆகப் போறீங்க?" - நான்.
"நானா...நானு படிச்சுட்டு அம்மா ஆகப் போறேன்!!!!!!
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

நல்ல யோசிக்கிறீங்க...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

ha ha ha...

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
விளையாட்டு மைதானத்தில்
ஒரு முறை கூட
உன்னை பார்த்ததில்லை!

வெளி விளையாட்டே
பிடிக்காதென்றால் எப்படி?
சரி விடு!அம்மா அப்பா விளையாட்டு
சொல்லித்தரவா?

Related Posts Plugin for WordPress, Blogger...