திங்கள், அக்டோபர் 03, 2011

எருமையின் எமன்




கதை சொல்லி ரொம்ப நாளாச்சு. அதனால இப்போ ஒரு கதை. இந்த கதையில் வரும் மனிதர்கள், சம்பவங்கள், இடங்கள் யாவும் உண்மையே.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை, கோடம்பாக்கம் ஆற்காட் ரோட்டின் போக்குவரத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த போது, கைப்பேசி அழைத்தது. சாலையில் வண்டி ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்ற நல்ல விஷயத்தை நான் கடைபிடிக்க முயற்சி செய்வதால், யார் கூப்பிட்டது என்பதை கவனிக்கவில்லை. (கலெக்டரா கூப்பிட்டிருக்கப் போறார்? நம் உயிரை / நல்ல உடலை விடவும் கலெக்டரா முக்கியம்?) வீட்டுக்கு வந்த பின்யாரோ அழைத்தது குயிலா…” பாடிக்கொண்டே பார்த்தேன். பிரகாஷ் ஆனந்த் கூப்பிட்டிருந்தான்.

பிரகாஷ் ஆனந்த் - தினமும் விழுப்புரத்தில் இருந்து சிங்கார சென்னைக்கு (சிங்காரம் தானே உலக பணக்காரரா இருக்கணும்!) வேலைக்கு வந்து போகும் எனது நண்பன். வார விடுமுறைக்கு நானும் ஊருக்கு போவேன் என்பதால் கூப்பிட்டிருப்பான் என யோசித்துக் கொண்டே அவனை கைப்பேசியில் அழைத்தேன். “ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ்ல போறேன். வர்றியா?” என்றான். “முயற்சி பண்றேன். முடியலன்னா பாண்டிச்சேரில வர்றேன்என கூறி வைத்தேன்.

முகம் கழுவி, (துவைக்க வேண்டிய) துணிகளை எடுத்துக் கொண்டு, நண்பன் வெங்கடேசன் உதவியுடன் ஆற்காடு சாலையில் நகர்ந்து நகர்ந்து, கோடம்பாக்கம் மின்வண்டி நிலையத்தில் இறங்கி, விழுப்புரம் வரைக்குமான பயணச்சீட்டு அங்கேயே எடுத்துக் கொண்டு, தாம்பரம் வந்து சேர்ந்த போது மணி மாலை 5.45. ஒன்பதாம் நடைமேடையில் 6.05 க்கு கிளம்ப வேண்டிய விழுப்புரம் பாஸஞ்சர் நின்று கொண்டிருந்தது.

அஞ்சு நிமிஷம் முன்ன வந்திருந்தா ராமேஸ்வரத்த பிடிச்சிருக்கலாம், நினைத்துக் கொண்டே எனது வண்டிக்காக காத்திருந்தேன். அதே தேநீர் வியாபாரி, அதே பார்வை இழந்த பிச்சைக்காரர், அதே காலை சுற்றும் நாய், இதனிடையே அருகிருந்த எல்லோரிடமும் ஓடி சென்று விளையாடிக் கொண்டிருந்த குழந்தை காத்திருத்தலின் அவஸ்த்தையை காணாமல் போகச் செய்திருந்தான். (குழந்தையின் அம்மா, வழியனுப்ப வந்த தனது தகப்பனிடம் பேசிக் கொண்டிருந்தாள்). ஆறு மணிக்கு எட்டாவது நடைமேடைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது.

குழந்தையை கவனித்துக் கொண்டே இருந்ததில் கவனிக்க தவறி, சட்டென கவனித்தேன். மணி 6.12. கன்னியாகுமரியும், விழுப்புரம் பாஸஞ்சரும் இன்னும் நின்று கொண்டிருந்தது. ஆறு மணிக்கே கன்னியாகுமரி கிளம்பி இருக்கணுமே!, ஏன் இன்னும் கிளம்பல? என்ற சிந்தனையுடன் காதை தீட்டிக் கொண்டு அறிவிப்பை கவனித்தேன். நேரம் குறிப்பிடாமல் தாமதமாக கிளம்பும் என்று மட்டும் சொன்னார்கள். என்ன ஆச்சு என தெரிந்து கொள்ள பிரகாஷ் ஆனந்த்க்கு போன் செய்தேன்.

பெருங்களத்தூர் கிட்ட டிராக்ல எருமை மாடு வந்து அடிச்சு, ராமேஸ்வரம் எஞ்சினோட பிரேக் வால்வு உடஞ்சு போச்சு. அதான் எல்லா வண்டியும் நிக்குதுஎன்றான். “ஸ்பேர் எஞ்சின் தாம்பரத்துல இருக்குமாடாஎன்றேன். “இல்லைடா, எக்மோர்ல இருந்து வரணும். இல்லன்னா விழுப்புரத்துல இருந்து வரணும்என்றான்.

கன்னியாகுமரி, அடுத்தது விழுப்புரம் பாஸஞ்சர், அப்புறம் நிஜாமுதீன், அதுக்கப்புறம் தான் பாண்டிச்சேரி. என்னடா இது, எப்போ போய் சேருவோம்னே தெரியலயே, பஸ்ல போலாம்னாலும் இன்னைக்கு நிக்க கூட இடம் கிடைக்காது. மறுநாள் இரத்த தான முகாம் நடத்த வேண்டி இருந்ததால திரும்பியும் போக முடியாது. வேற வழியே இல்லை என காத்திருக்க முடிவு செய்தேன். இந்த களேபரங்களுக்கு நடுவில் என்னை மகிழ்வித்துக் கொண்டிருந்த அந்த குழந்தையை தொலைத்து விட்டிருந்தேன்.

நடைமேடையில் கூட்டம் அதிகமாயிருந்தது. காற்று வீசவே இல்லை. எல்லோரும் ஒருவித இறுக்கத்தில் இருந்தோம். அந்த தேநீர் வியாபாரியும், பார்வை இழந்த பிச்சைக்காரரும் தங்கள் வேலையில் மும்முரமாயிருந்தனர். அந்த நாயை காணவில்லை. பிரகாஷ் ஆனந்த் போன் செய்தான்.

வண்டிய மெதுவா நகத்தி வண்டலூர்ல லூப்ல போட்டுட்டான். இப்போ கன்னியாகுமரி எடுத்திடுவான். நான் அதில தான் போகப்போறேன். நீயும் வர்றதுன்னா வா.” என்றான். “இல்லைடா, நான் சூப்பர் ஃபாஸ்ட் டிக்கட் எடுக்கலடா. பாண்டிச்சேரி, விழுப்புரம் பாஸஞ்சர் எதை முதல்ல எடுக்கறானோ அதில வர்றேன்என்றேன்.

சரியாக 7.16-க்கு கன்னியாகுமரி கிளம்பியது. கூட்டம் கொஞ்சம் குறைந்தது. லேசாக காற்று வீசியது. 7.30-க்கு விழுப்புரம் பாஸஞ்சர் கிளம்பியது. நான் அதில் ஏறிக்கொண்டேன். எனது பக்கத்தில் கல்லூரி தோழர்கள் மூன்று பேரும், கணனி ஆசாமி ஒருவரும் உட்கார்ந்திருந்தனர். எல்லோரும் விடுமுறைக்காக ஊருக்கு செல்பவர்கள் தான்.

வழக்கம் போல பஸ்லயே போயிருக்கலாம். இவன் பேச்சை கேட்டு புதுசா டிரெயின்ல வந்தது தப்புடா.” கல்லூரி மாணவன் ஒருவன் குறை பட்டுக் கொண்டான். “ஒம்பது மணிக்கு மேல எங்க ஊருக்கு பஸ் இல்லைடாகவலைப் பட்டான் இன்னொருவன். “எங்க வீட்டுல தங்கிட்டு காலைல போடாஇது மூன்றாமவன்.

அஞ்சு டிரெயின் லேட். ஒரு ட்ரெயினுக்கு ஆயிரம் பேர்னு கணக்கு வச்சாலும் ஐயாயிரம் மணி நேரம் வேஸ்ட். இதுக்கெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாதா?” அலுத்துக் கொண்டார் சாஃப்ட்வேர் ஆசாமி.

கிளம்பும் அவசரத்தில் படிக்க புத்தகம் எடுத்து வைக்க மறந்து விட்டேன். எனக்கு பசி வயிற்றை கிள்ளியது. நான் மேலே ஏறி படுத்துக் கொண்டேன். ஒருவழியாய் வண்டி விழுப்புரம் வந்து சேர்ந்த போது மணி 10.30. ரொம்ப தாமதம் ஆனதால் என்னை அழைத்து செல்ல அப்பா ஸ்டேஷனுக்கே வந்திருந்தார்.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டதும் அம்மா கேட்டாள், “என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ லேட்?”. நான் நடந்ததையெல்லாம் சொன்னேன்.

அம்மா சொன்னாள், “பாவம்டா மாடு.”

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

7 கருத்துகள்:

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
உன் கதைகளை
பொறுமையாக கேட்கிறேன்
என்பதற்காக இப்படியா?

சரி விடு!
எல்லோரிடமும் ஏராளமாய்
கதைகள் இருக்கின்றன!
யார்தான் கேட்பது?

ரசிகன் சொன்னது… [Reply]

@சீனுவாசன்.கு
ரொம்ப போர் அடிச்சிட்டேனோ?

shanevel சொன்னது… [Reply]

கதை சொல்லும் பாணி விறுவிறுப்பாக உள்ளது... ஆனால் கதையில் சொல்லவரும் கருத்து என்ன என்பதில் குழப்பமோ குழப்பம்..! இது கதை யல்ல நிஜம்..!

பெயரில்லா சொன்னது… [Reply]

கடைசி வரி முத்தாய்ப்பு...

சீனு அவரது குறுங்கவிதையை விட்டு சென்றுள்ளார்...நீங்கள் கலங்காதீர்கள்...

ரசிகன் சொன்னது… [Reply]

@ரெவெரி
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி ரெவெரி :)

ரசிகன் சொன்னது… [Reply]

@shanevel
உலகத்தில் உள்ள எல்லா உறவுகளிலும் சிறந்தவள் அம்மா. அது எதனால் என்பது தான் கதையின் கருத்து.

Bharath Computers சொன்னது… [Reply]

எருமை கடைசியாய்
கத்திய வார்த்தை
அம்மா என்று இருக்குமோ?

Related Posts Plugin for WordPress, Blogger...