வியாழன், ஆகஸ்ட் 18, 2011

நேதாஜி




மாவீரர் நேதாஜி அவர்களின் நினைவு நாள் இன்று (அரசு ஆவணங்களின் படி). ஆனால், நம்மில் பலர் அவர் அந்த விபத்தில் இறந்ததாக நம்பவில்லை.

எனது நண்பன் சௌந்தரராஜன், தனது கனவு நாயகனான அவர் புகைப்படத்தின் கீழே இப்படி எழுதி இருக்கிறான், "மரணமெல்லாம் மகாத்மாவுக்கு தான். மாவீரனுக்கல்ல"

சுதந்திரம் வேண்டி இந்தியாவில் எல்லோரும் போராடி கொண்டிருக்க, அதற்கு நல்லதொரு வாய்ப்பாக வந்தமைந்தது இரண்டாம் உலகப் போர். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஓரணியில் இருக்க, எதிர் அணியில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் இருந்தன. எதிரிக்கு எதிரி நண்பன் எனும் படி, பிரிட்டனை எதிர்ப்பவர்களுடன் கூட்டமைத்தார் நேதாஜி. போரில் வென்றால் இந்தியாவிற்கு சுதந்திரம் என ஒப்பு கொண்டு பிரிட்டனுக்கு எதிராக போராட இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார்.

ஆனால் எதிர்பாராவிதமாக ஆகஸ்ட் 6, 1945 அன்று ஜப்பானிய நகரங்களில் அமெரிக்காவால் போடப்பட்ட அணுகுண்டு, உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தது. தன் அணி தோற்றத்தாலும், தான் எதிர்த்த பிரிட்டன் வென்றதாலும், தனது வியூகத்தை மாற்ற ஜப்பான் ராணுவத்தின் உதவியுடன் தைவானில் விமான விபத்தில் தான் மரணமடைந்ததாக ஒரு செய்தியை பரப்பி, ஜப்பான் வழியாக ரஷ்யாவிற்கு சென்றார். (2005 ல் மத்திய அரசால் நேதாஜியின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முகர்ஜி கமிஷன், அவர் தைவான் விமான விபத்தில் இறக்கவில்லை என்றே அறிக்கை அளித்தது.)

அவர் பகவான்ஜி என்ற பெயரில் சாமியாராக உத்திர பிரதேசத்தில் அயோத்திக்கு அருகில் ராம்பவன் என்ற கிராமத்தில் வாழ்ந்தார் என உறுதியாக நம்புபவர்கள் இருக்கின்றனர். இருவரது உருவ அமைப்பும், பழக்க வழக்கமும், ரசனையும், நண்பர்களும், கையெழுத்தும் ஒரே மாதிரி இருந்ததாக கூறுகின்றனர். TIMES பத்திரிக்கையும் நேரு அவர்களின் மரணத்தை காண வந்த சுபாஷை போலவே இருக்கும் ஒரு சாமியார் படத்தை போட்டு அவர் சுபாஷாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தது.

இப்படியெல்லாம் இருந்த சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நேதாஜியின் ஓட்டுனராக இருந்த 107 வயதாகும்  திரு.நிஜாமுதீன் அவர்கள், விபத்து நடந்து நான்கு மாதங்களுக்கு பிறகு பர்மா, தாய்லாந்து எல்லை அருகில் உள்ள சிடங்பூர் ஆற்றங்கரையில் அவரை இறக்கி விட்டதாக கடந்த 12 ம் தேதி கூறி உள்ளார்.

தேசிய அளவில் புகழின் உச்சியில் இருந்த ஒரு மனிதர், தன்னை மறைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எளிமையாக வாழ்வது என்பது சாதாரண விஷயமல்ல. உண்மையிலேயே அவர் மாவீரர் தான். அரசின் காவலையும் மீறி Great Escape ஆனதாலோ, யுத்த நேரத்தில் நீர்மூழ்கியில் பயணித்ததாலோ மட்டுமல்ல. இப்படி ஒரு எளிய வாழ்கை வாழ்ந்ததாலும் தான்.

குறிப்பு: பகவான்ஜி 16 செப்டம்பர் 1985 இல் காலமானார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் உங்கள் பணம் (நன்கொடை) திருப்பி தரப்படும் என்ற உறுதி மொழியுடன்

ஆசாத் ஹிந்த் வங்கியால் வெளியிடப்பட்ட (ஒரு  லட்ச)   ரூபாய். (இணையத்தில் எடுத்தது)

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது… [Reply]

சல்யூட்...

Bharath Computers சொன்னது… [Reply]

காந்திஜி = அன்னா ஹசாரே
நேதாஜி = ?

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
எல்லோருக்கும்
எதோ ஒரு நாள்
நினைவு நாளாய் அமையும்!

ஆனால்
எனக்கு மட்டும்
உன்னை நினைக்காத நாள்
நினைவு நாளாய் அமையும்!

Related Posts Plugin for WordPress, Blogger...