செவ்வாய், ஜூலை 19, 2011

பயிரை மேயும் வேலி!

சென்னை தி.நகர் வாணி மகாலில் "இந்திய குடிமக்களாகிய நாம்" என்ற அமைப்பின் சார்பில் நேற்று நடத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு.N.விட்டல், ஆடிட்டர் திரு.குருமூர்த்தி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சார்ந்த திரு.செ.மா.அரசு, மேடைபேச்சாளர் திரு.சுகிசிவம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
திரு. விட்டல் அவர்கள் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்டாலே ஒருவர் தேர்தலில் நிற்பது தடை செய்யப்பட வேண்டும். இதன் மூலம் குற்றவாளிகளையும் ஊழல்வாதிகளையும் அரசியலிலிருந்து களைய முடியும். ஆனால் இதில் நிரபராதியான யாரோ ஒருவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடப் படும் பொய் வழக்கின் மூலம் பாதிக்கபடலாம் இல்லையா? இதை தவிர்க்க, இத்தகைய வழக்குகள் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரே ஒரு மேல் முறையீட்டுக்கு அனுமதி உண்டு. அதுவும் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். ஆக ஒரு வழக்கு அதிகபட்சம் ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டால், பொய் வழக்கு பிரச்சினையை தவிர்க்கலாம்.
பணி இட மாற்றமும், தற்காலிக பணி நீக்கமும் ஆகிய இந்த இரண்டும் தான் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்தும் ஆயுதம். இது தவிர்க்கப்பட வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை தான் பணியிட மாற்றம் என்பது விதியாக்கப்பட வேண்டும். மேலும் அதிகாரிகளின் மேல் ஊழல் புகார்கள் வரும்பட்சத்தில் உடனே தற்காலிக பணி நீக்கம் செய்யாமல் மத்திய கண்காணிப்பு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டால் (முக்கியமான சில உயர் பணிகளின் அதிகாரிகள் [அவர்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவு இருப்பார்கள்.] குறித்த விசாரணைகளுக்கு.) அந்த குற்றத்தின் உண்மை தன்மை குறித்து இரண்டே நாளில் ஆணையம் தகவல் அளிக்கும். இதன் மூலம் தேவையில்லாத தண்டனைகள் குறையும். அதிகாரிகள் மீதான அரசியல்வாதிகளின் ஆதிக்கம் குறையும். அதனால் நேர்மையான ஊழியர்கள் அச்சமில்லாமல் தங்கள் பணியை செய்ய முடியும். என பல உபயோகமான தகவல்களை கூறினார்.
 திரு.குருமூர்த்தி அவர்கள் கருப்பு பணம் எப்படி கடல் கடக்கிறது, அது ஏன் பொருளாதாரத்தில் ஒரு இன்றியமையாத விஷயமாகியது, அதை எப்படி ஒழிக்கலாம் என தெளிவாக பேசினார்.
அரங்கம் நிரம்பி நின்று கொண்டு பலர் கலந்து கொண்டது நேர்மையான சமூகம் சாத்தியம் என்ற நம்பிக்கை கொள்ள செய்தது. ஆனால் கலந்து கொண்ட பெரும்பாலோர் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.
திரு.சுகிசிவம் அவர்கள் மன்றங்களின் (சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம்) மாண்பு குறித்து பேசினார். அவர் எவ்வளவோ அற்புதமான விஷயங்கள் சொன்னார். அதில் ஆணி அடித்தர்போல மனதில் நின்றது....
"பட்டுகோட்டையார் ஒரு பாட்டு எழுதினர்.. திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது அப்படின்னு. அவர் காலத்தில அப்படி இருந்தது. ஆனா இப்போ, இது ரெண்டையும் ஒரே ஆள் தானே செய்யறான்."
வருத்தப்பட /  மாற்றப்பட வேண்டிய விஷயம்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

3 கருத்துகள்:

VenSan சொன்னது… [Reply]

வேலியை மேயும் பயிர்
வேலியை மேயச்செய்யும் பயிர்

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

லஞ்சம் பற்றிய
என்னவளின்
கருத்தைக் கேட்டேன்!

ஐஸ்கிரீமோடு
பேசலாமா?
என்று கேட்கிறாள்!

shanevel சொன்னது… [Reply]

பணம் என்றால் லஞ்சம் என்றாகிவிட்டது ... என்ன செய்ய?

Related Posts Plugin for WordPress, Blogger...