வெள்ளி, ஜனவரி 07, 2011

அன்புமயமாதல்...




குழந்தையுடன்
கோயிலுக்குச் சென்றேன்

பூக்காரப் பெண்
கூடுதல் ரோஜா கொடுத்தாள்


பிள்ளையாரை வணங்கிய பெரியவர்
பிள்ளையின் கன்னம் கிள்ளிப்போனார்


கற்பூர ஆரத்தி ஒற்றி
குங்குமம் இட்டுவிட்டார் குருக்கள்


பிறிதொருவர் பிரசாதம் அளித்து
புன்னகைத்தார்


அவ்வேளையில்
அம்மனின் மார்பிலும் சுரந்திருக்கலாம்
பிள்ளைக்கான பால்!

- ஆர்.எஸ்.பாலமுருகன்


நன்றி - ஆனந்த விகடன் / 12 ஜன 2011 இதழ்.
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 கருத்துகள்:

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
எல்லோரையும் காப்பாற்றும்
கடவுளர்கள் தானே
கோவிலுக்கு உள்ளே இருக்கிறார்கள்?

அடடா
யார் இப்படி
பெரிதாக எழுதிவைத்தது?
திருடர்கள் ஜாக்கிரதை! என்று

Related Posts Plugin for WordPress, Blogger...