செவ்வாய், ஜனவரி 11, 2011

பேருந்து பயணம்...



குத்த வைத்து காத்திருந்து, 
வரும் ஒவ்வொரு பேருந்துக்கும் எழுந்திருந்து,
"ஏம்பா இந்த பஸ்சு எங்க போகுது?" என கேட்கும் 
பாம்பட பாட்டிகளை இப்போது காணவில்லை.

முதியவர்கள் வந்தால் எழுந்து இடம் தரும் 
இளைஞர்களும் குறைந்து போனார்கள்.

அச்சடித்த டிக்கட்டுக்கு பதில், டிக்கட் 
அச்சடிக்கும் எந்திரம் நடத்துனரின் கைகளில்.

"வாழப்பாடில விறகு கடை முருகேசன் தெரியுமா?" 
"எங்க மாமா தாங்க அவரு!" 
புதிய அறிமுகங்களுக்கும், வாழ்கையின் 
சுவாரசியங்களுக்கும் வழி விடாமல் 
பேருந்துகளில் தொலைகாட்சிபெட்டி.

பேருந்து பயணத்தில் இன்னும் மாறாமல் இருப்பது, 
பேசிக் கொண்டே இருக்கும் பேருந்தின் ஜன்னல்களும், 
அரசாங்கம் பராமரிக்கும் (!) குழி விழுந்த சாலைகளும் தான்.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

1 கருத்துகள்:

சீனுவாசன்.கு சொன்னது… [Reply]

என்னவளே
ஊர்தோறும்
நாறிக்கொண்டிருக்கின்றன
பேருந்து நிலைய கழிப்பறைகள்!

அடடா
அரசாங்கம் பராமரிக்க
இதைவிட முக்கியமானவைகள் ஏராளம்
வேண்டுமானால் மூக்கை மூடிக்கொள்!

Related Posts Plugin for WordPress, Blogger...